உள்ளூர் செய்திகள் (District)

ஏரியில் மணல் திருடிய 2 பேர் கைது

Published On 2023-05-18 04:57 GMT   |   Update On 2023-05-18 04:57 GMT
ஏரியில் மணல் திருடிய 2 பேர் கைது செய்யபட்டனர்

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் மணல் திருட்டு நடைபெற்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்ட பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் இது குறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ. பூபாலன் வழக்கு பதிந்து, பிடிபட்ட இருவரையும் கைது செய்தார். மேலும் பட்டுரோஜா (45), மகேஸ்வரி (50), பெரியசாமி (40) ஆகியோரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News