உள்ளூர் செய்திகள் (District)
- புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்:
அரியலூர் வி.கைகாட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 32) என்பவர் தனது மளிகை கடையிலும், கயர்லாபாத் பனமரத்து சாலையை சேர்ந்த கருப்பையா (55) என்பவர் பழைய போலீஸ் நிலையம் எதிரே புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.