ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் சாவு
- ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் திடீர் பலியானார்
- இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர் புகார்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் ரங்க–சாமி. இவரது மனைவி வைரம் (வயது60). ரங்கசாமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில் வைரம் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில மாதங்களா–கவே வைரம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படு–கிறது.
இதனால் அவருக்கு கிட்னி பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வைரத்திற்கு கடந்த 27ந்தேதி இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவரை அப்பகுதியில் உள்ள சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வெளியூர் கொண்டு செல்லும் போது வழியிலேயே இறந்து விட்டார்.
இதனால் தனது அத்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப–திந்து விசாரித்து வருகின்ற–னர்.