உள்ளூர் செய்திகள் (District)

கோவில் அருகே முதியவர் பிணம்

Published On 2022-10-12 09:26 GMT   |   Update On 2022-10-12 09:26 GMT
  • கோவில் அருகே முதியவர் பிணமாக கிடந்தார்.
  • கிராம நிர்வாக அலுவலர் தகவல் கொடுத்தார்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள மண்டபம் முன்பு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, கல்லங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் முதியவர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News