உள்ளூர் செய்திகள் (District)
அரியலுாரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
- அரியலுாரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
- பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ.40.91 இலட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்கும் பணிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அடிக்கல் நாட்டினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.40.91 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஈஸ்வரன், செயற்பெறியாளர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர்மகாலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.