ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி
- ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்
- இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் கார்த்தி (வயது32). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவர் திருமணம் செய்வதற்காக சொந்த ஊருக்கு வந்து 6 மாதங்கள் ஆகிறது. அவர் அவ்வப்போது கூலி வேலைக்கு சென்று வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கார்த்தி கழுவதோண்டி கரைமேடு சாலையில் உள்ள கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது அருகிலுள்ள மின்சார ஒயரில் தலை உரசவே மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கார்த்தி உயிரி்ழந்தார்.
இச்சம்பவம் அறிந்து இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத், உதவி ஆய்வாளர் இளங்கோவன் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உறவினர்கள் மின்சாரத்துறையிடம் மின் ஒயரை மாற்ற பலமுறை கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.