எல்.ஐ.சி. 68 ஆம் ஆண்டு தொடக்க விழா
- அரியலூரில் எல்.ஐ.சி.யின் 68-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
- டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் விழாவை தொடங்கி வைத்தார்
அரியலூர்,
அரியலூர் எல்.ஐ.சி அலுவலகத்தில், அந்நிறுவனத்தின் 67-ம் ஆண்டு நிறைவு மற்றும் 68-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, அனைவரும் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார். அந்நிறுவனத்தின் அரியலூர் கிளை மேலாளர் பி.ஜெயபாலன் தலைமை வகித்து, எல்.ஐ.சி. நிறுவனம் தொடங்கப்பட்டதின் நோக்கம், அதன் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார். முகவர்கள் கிருஷ்ணன், நீலமேகம், பாலு மற்றும் வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக உதவி நிர்வாக அதிகாரி ஜெயா வரவேற்றார். முடிவில் நிர்வாக அதிகாரி தமிழரசன் நன்றி தெரிவித்தார். ஒருவாரம் நடைபெறும் இந்நிகழ்வில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.