உடையார்பாளையம் அருகே ஏரியில் விழுந்து ஒருவர் பலி
- உடையார்பாளையம் அருகே ஏரியில் விழுந்து ஒருவர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு காலனிதெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 42). இவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனாலும் தங்கமுத்து பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சின்ன வட்ட குளம் ஏரியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி உள்ளிட்ட போலீசார் தீயணைப்பு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போதுதான் பிணமாக கிடந்தவர் மாயமான தங்கமுத்து என்பது தெரியவந்தது. மேலும் இவர் மது போதையில் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து வீசி விட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.