உள்ளூர் செய்திகள் (District)

ஆண்டிமடம் அருகே கர்ப்பிணி பெண் தற்கொலை

Published On 2022-10-02 09:14 GMT   |   Update On 2022-10-02 09:14 GMT
  • ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).
  • புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிலம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் நந்தினி ( வயது 21).

இவருக்கும் அதை ஊரைச் சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது நந்தினி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். புகழேந்திக்கும் நந்தினிக்கும் இடையே வரதட்சனை தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் நந்தினி தனது வீட்டின் மாடியில் உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளித்து இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நந்தினியின் பெற்றோர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவர் புகழேந்தி மற்றும் மாமியாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.



Tags:    

Similar News