உள்ளூர் செய்திகள் (District)
- மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தேவகி (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.