உள்ளூர் செய்திகள் (District)

போலீஸ் என கூறி பணம் பறித்த வாலிபர்

Published On 2023-07-22 07:45 GMT   |   Update On 2023-07-22 07:45 GMT
  • 2 கடைகளில் போலீஸ் என கூறி பணம் பறித்த வாலிபர்
  • கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்

 அரியலூர், 

கீழப்பழுவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருச்சி பிரதான சாலையில்பெட்டிக்கடை நடத்தி வருபவர் சுப்பிரமணி மனைவி ஷீலா(வயது50). இவரது கடைக்கு காக்கிப் பேண்ட் அணிந்து வந்திருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் போலீஸ் எனக் கூறி மிரட்டி, அவரிடம் ரூ.15 ஆயிரத்தையும், இதே போல் தஞ்சாவூர் சாலையில் பெட்டிக் கடை நடத்தி வரும் நடராஜனையும் மிரட்டி, அவரிடம் ரூ.10 ஆயிரத்தையும் பறித்துச் சென்றுள்ளார். இதுகுறிது ஷீலா அளித்த புகாரின் பேரில், திருமானூர் கொள்ளிடக் கரை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை மறித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். விசாரணையில் ,அவர் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பகவதிராஜ் (33) என்பதும், மேற்கண்ட பெட்டிக் கடை உரிமையாளர்களிடம் பணம் பறித்தவர் என்பதும், இவர் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் போக்சோ வழக்கு மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து பகவதிராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News