- பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாலை மற்றும் பொது இடங்களில் சுகாதார பாதிப்பு ஏற்படும் வகையில் எச்சில் துப்புகின்றனர்.
மேலும் அசுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஏகராஜ் கலந்து கொண்டு, பொதுஇடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை உதவி பேராசிரியை ஜாக்குலின் மார்டின், உதவி பேராசியைகள் கோமதி, சசிரேகா மற்றும் மாணவிகள் செய்து இருந்தனர்.