உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோட்டில் புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-13 07:30 GMT   |   Update On 2023-01-13 07:30 GMT
  • வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நக ராட்சி சார்பில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி

ராஜவேல், தாமரைச்செல்வி, மணிகண்டன், சினேகா ஹரிகரன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, செல்லம்மாள் தேவராஜன், முருகேசன் சுரேஷ்குமார், மற்றும் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் துப்புரவு ஆய்வாளர் குமரவேல், மகாதேவா, வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மற்றும்

மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News