உள்ளூர் செய்திகள் (District)

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: பஸ், ரெயில்கள் நிரம்பின

Published On 2024-10-04 05:58 GMT   |   Update On 2024-10-04 05:58 GMT
  • விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம்.
  • வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன.

சென்னை:

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர் பயணம் அதிகரிப்பது வழக்கம். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப் படும் தசரா பண்டிகை நேற்று தொடங்கியது.

இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில் ஆயுதபூஜை, வருகிற 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை), 12-ந் தேதி (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.


இதனை தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 10-ந் தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கான இடங்கள் நிரம்பின.

குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் நெல்லை, முத்து நகர், அனந்தபுரி, திருச்செந்தூர், பொதிகை, பாண்டியன், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பிவிட்டன.

இதேபோல கோவை செல்லக் கூடிய ரெயில்களில் இடங்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் நீடிக்கிறது. பெங்களூர் பயணத்திற்கும் இடமில்லை. சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வந்தே பாரத் ரெயில்களும் நிரம்பிவிட்டன. தீபாவளி, பொங்கல், வரை அதில் இடமில்லை.

ஆயுதபூஜை விடுமுறை பயணத்திற்கு இதுவரை 27 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் முன்பதிவு விறு விறுப்பாக இருக்கும் என்று அரசு விரைவு போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரி வித்தார்.


ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி வருகிற 9, 10-ந் தேதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றிய அறிவிப்பு 7-ந் தேதி வெளியிடப்படும்.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணத்தை தொடர முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெறும்.

அதில் தமிழகம் முழுவ தும் சிறப்பு பஸ்கள் இயக்கு வது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பஸ்கள் வந்துள்ளன. பழைய பஸ்களுக்கு பதிலாக இவை இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News