தமிழ்நாடு (Tamil Nadu)
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு- செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை
- வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் 471 நாட்கள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
இதையடுத்து வெளியே வந்த செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி உள்ளார்.