உள்ளூர் செய்திகள்

 கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் கரடி நடமாட்டம்

Published On 2022-12-15 09:35 GMT   |   Update On 2022-12-15 09:35 GMT
  • கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
  • கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

ஓசூர்,

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பன்னேர்கட்டா அருகே ஜிகினி, கல்லுபலு ஆகிய பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும், ஒரு கோவிலுக்கு அருகிலும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று நடமாடியது, அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

சமீப நாட்களாக அடிக்கடி இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறையினரும் பாதுகாப்பாக இருக்குமாறு கிராம மக்கள் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News