உள்ளூர் செய்திகள் (District)
நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த குவாரி சூப்பர்வைசர் பலி
- திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது.
- பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் படுகாயமடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் போலீஸ் சரகம் கூத்தப்பாடி டீக்கடை பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது62). இவர் கல்குவாரி ஒன்றில் லேபர் காண்டிராக்ட் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூர் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது செல்லக்குடி என்ற இடத்தின் அருகே வந்த போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதில் உடனே பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த அருணாச்சலம் படுகாயமடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.