உள்ளூர் செய்திகள்

பூமிபூஜையை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-18 09:49 GMT   |   Update On 2022-09-18 09:49 GMT
  • பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • சுமார் 10 கிலோ மீட்டர் வரை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் கீழ் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறும்போது:-

திட்டச்சேரி பேரூராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள பழைய ஆரம்ப சுகாதார கட்டிடத்தினை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15-வது நிதிகுழு மானியம் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைக்கப்பட்டு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறும். இந்த புதிய சுகாதார கட்டிடத்தின் மூலம் திட்டச்சேரியை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் வரை உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு பயன்பெறுவார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News