உள்ளூர் செய்திகள்

கோவையில் ஆற்றில் குளித்தபோது மயங்கி விழுந்து தச்சு தொழிலாளி பலி

Published On 2023-05-23 09:27 GMT   |   Update On 2023-05-23 09:27 GMT
  • பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
  • புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் பெத்தம்பட்டி என்.எம்.காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தச்சு வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலகிருஷ்ணன் மனைவியை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News