உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வத்தலக்குண்டு அருகே அரசு பஸ்சை வழிமறித்து போதை வாலிபர்கள் ஆட்டம் - 10 பேர் மீது வழக்கு

Published On 2023-09-12 06:27 GMT   |   Update On 2023-09-12 06:27 GMT
  • பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.
  • புகாரின்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வத்தலக்குண்டு :

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை விராலிப்ப ட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார். பண்ணைப்பட்டி பிரிவு அருகே பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.

டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறங்கி அவர்களை தட்டிக் கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய துடன் பஸ்சையும் அடித்து தாக்கினர். அதன் பிறகு பயணிகள் சத்தம் போடவே அங்கிருந்து சென்று விட்டனர்.

அதன் பிறகு அய்யப்ப னின் உறவினர்கள் அங்கு வந்து விசாரித்தபோது அவர்களையும் போதை வாலிபர்கள் தரக்குறைவாக திட்டியுள்ளனர். போதை வாலிபர்கள் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.

இது குறித்து வத்த லக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. முருகன் தலைமை யில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News