உள்ளூர் செய்திகள் (District)
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 54 பேர் மீது வழக்கு
- கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியவர்கள், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள்,உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களிடமிருந்து அபராதமாக ரூ.57,500 வசூலிக்கப்பட்டது.