உள்ளூர் செய்திகள் (District)

தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 17 பேர் மீது வழக்கு பதிவு; 2 பேர் கைது

Published On 2023-08-22 09:33 GMT   |   Update On 2023-08-22 09:33 GMT
  • ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
  • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42) விவசாயி, இவரது மகன் செல்வம் (15) மாற்றுத்திறனாளி, இவர் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது வழியில் மாடு கட்டியிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாராயணன் (43) என்பவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஏழுமலை, அவரது தம்பி சரவணன், மற்றும் சரவணன் மனைவி சுகந்தி ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து ஏழுமலை தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி புதுமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன், மணிரத்தினம், கண்ணன், மணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணிரத்தினம் மற்றும் பத்ரி நாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இதே போல் பத்ரி நாராயணன் தனது வீட்டிற்கு செல்லும் வழியை ஆக்கிரமித்ததாக கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, அவரது மனைவி ரேவதி, உறவினர்கள் சரவணன், சுகந்தி, கலைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அம்சா, சடையன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தன், சுமதி, வீரமங்கலத்தைச் சேர்ந்த வீரப்பன், தியாகதுருகத்தைச் சேர்ந்த பவுனாம்பாள், பாரதி, மணிவேல், சாந்தி ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News