உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-24 10:49 GMT   |   Update On 2023-06-24 10:49 GMT
  • மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பூதலூர்:

தஞ்சை மாவட்டம் பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோ உரிய முறையில் பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தொடர் மின்தடையை கண்டித்து இன்று காலை பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் வீரமரசன்பேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள், வாலிபர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்தடையை கண்டித்தும், அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ,சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News