உள்ளூர் செய்திகள்
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்று
- மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
- நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஊராட்சி மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல் முன்னிலை வகித்தார். இதில் மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 600 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் வழங்கினார்.