கோவை கார் குண்டு வெடிப்பு குறித்து அவதூறு: கிஷோர் கே.சாமி மீண்டும் கைது
- கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
- கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
கோவை:
சென்னையை சேர்ந்த வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே.சாமி.
இவர் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தெரிகிறது.
இது தொடர்பாக கிஷோர் கே.சாமி மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் சென்னையில் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டார்.
இதனை அறிந்த கோவை போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரை கோவை 4-வது குற்றவியில் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்பாக இன்று ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து கோவை வழக்கில் வருகிற 12-ந் தேதி வரை கிஷோர் கே.சாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
மேலும் மாநகர சைபர் கிரைம் போலீசார் 2 மணி நேரம் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இதனைதொடர்ந்து கிஷோர் கே சாமி தரப்பில் ஜாமீன் கேட்டு 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன்0 மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.