உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2022-10-08 07:51 GMT   |   Update On 2022-10-08 07:51 GMT
  • குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார்.
  • கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலியானார்.

குமாரபாளையம்:

சென்னையை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார். ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னையில் இருந்து குமாரபாளையம் வந்த இவர் கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் சிகிச்சைகாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் கார் டிரைவர் சேலம் அருகே உள்ள மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (34) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News