உள்ளூர் செய்திகள் (District)

முதல்வர் இடமாற்றத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்

Published On 2023-03-16 09:13 GMT   |   Update On 2023-03-16 09:13 GMT
  • டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
  • இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.இதனை கண்டித்து கல்லூரியின் மாணவர்கள் 500 -க்குமேற்பட்டோர்அவரை மீண்டும் இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

Tags:    

Similar News