உள்ளூர் செய்திகள் (District)

தருமபுரி பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை படத்தில் காணலாம்.

காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-16 09:53 GMT   |   Update On 2023-11-16 09:53 GMT
  • மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார்.
  • பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசசை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும். வாழ்வா தாரமற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை முடக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News