உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் கட்டிட காண்டிராக்டர் மூச்சு திணறல் ஏற்பட்டு பலி

Published On 2023-05-05 09:14 GMT   |   Update On 2023-05-05 09:14 GMT
  • பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார்.
  • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ஏகமூர்த்தி (வயது 47). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு யமுனா என்ற மனைவியும், ஹர்சிகா என்ற மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று ஏக மூர்த்தி பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு சென்றார். 1-வது மலையில் சென்ற போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மருத்துவ குழுவினருடன் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

டாக்டர்கள் ஏகமூர்த்தியை பரிசோதனை செய்த போது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் டோலி மூலம் ஏகமூர்த்தியின் உடலை கீழே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News