உள்ளூர் செய்திகள் (District)
- கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மிட்டப்பள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது52) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.