உள்ளூர் செய்திகள் (District)
வீட்டில் வழுக்கி விழுந்து தொழிலாளி சாவு
சேலம் அன்னதானப்பட்டியில் வீட்டில் வழுக்கி விழுந்து தொழிலாளி பலியானார்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி புது கந்தப்பா காலனியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 58). இவர் நேற்று வீட்டில் திடீரென வழுக்கி விழுந்தார். தலையில் அடிபட்ட அவரை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.