உள்ளூர் செய்திகள் (District)

தருமபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் ரூ.16.58 லட்சத்திற்கு ஏலம்

Published On 2023-11-16 09:44 GMT   |   Update On 2023-11-16 09:44 GMT
  • 3261 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.13.72 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
  • பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலு வலர்கள் தெரிவிக்கின்றனர்

 தருமபுரி,

தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில்,46 விவசாயிகள் கொண்டு வந்த 3261 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.13.72 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

மேலும் நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்து 52 விவசாயிகள் கொண்டு வந்த 4053 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் ரூ.495 க்கும், அதிகபட்சமாக ரூ.265 ரூ க்கும், சராசரியாக ரூ.409-க்கும் என மொத்தம் ரூ.16.58 லட்சத்திற்கு விற்பனை யானது.

மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலு வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News