உள்ளூர் செய்திகள் (District)

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை

Published On 2022-11-01 09:01 GMT   |   Update On 2022-11-01 09:01 GMT
  • கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
  • போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் பாராட்டினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டிகள், கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும், 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவிகளை, தலைமை ஆசிரியர் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர், பாராட்டி வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News