உள்ளூர் செய்திகள் (District)

மது குடித்ததை தட்டிக் கேட்ட தொழிலாளியை வெட்டிய தி.மு.க பிரமுகர் கைது

Published On 2023-02-25 09:10 GMT   |   Update On 2023-02-25 09:10 GMT
  • சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.
  • இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட ஜெகநாதன், அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர், கத்தியால் ஜெகநாதனை தலையில் வெட்டினார்.இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னம்மாபாளையம் வீரபாண்டியார் நகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பாண்டியன் (31) என்பவரை கைது செய்தனர்.பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய செல்வகு மார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News