உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகத்திற்காக எந்த நிதியும் ஒதுக்கவில்லை-பெங்களூர் புகழேந்தி குற்றச்சாட்டு

Published On 2024-07-22 05:54 GMT   |   Update On 2024-07-22 05:54 GMT
  • மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
  • தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ஓசூர்:

ஓசூரில் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்மா உணவகம் மேம்பாட்டுக்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மனப்பூர்வமாக பாராட்டுகிறேன். அம்மா உணவகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவர் மேலும் பல கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

பல மாநிலங்களில் இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

தனது 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதகாக அமையும். மத்தியில் பிரதமர் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல.

சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் எப்போது வேண்டுமானாலும் பிரதமர் நாற்காலியை தள்ளி விடுவார்கள். நாட்டில் எதிர்கட்சிகள் வலுப்பெற்றுள்ளன. ஜனநாயகம் தழைத்தோங்கி உள்ளது.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

அப்போது ஜான் திமோதி, ராஜேந்திர கவுடா, ஜெயசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News