உள்ளூர் செய்திகள்

சமத்துவ மக்கள் கழக ஆண்டு விழா

Published On 2023-03-11 10:32 GMT   |   Update On 2023-03-11 10:32 GMT
  • நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
  • விழாவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை:

சமத்துவ மக்கள் கழகத்தின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், துணை செயலாளர் விநாயகமூர்த்தி, கொள்கை பரப்பு செயலாளர் முனீஸ்வரன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், இளைஞரணி துணை செயலாளர் பாலசேகர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன், மேற்கு மாவட்ட செயலாளர் சுபாஷ், வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், ஈரோடு மாவட்ட செயலாளர் சங்கர் குமார், பாண்டிச்சேரி தனபால், வடசென்னை சீனிவாசன், பகுதி செயலாளர்கள் முத்துக்குமார், ராஜேஷ், மணலி பாலசுப்பிரமணியம், சௌரா சுரேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் மீனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News