உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் பள்ளி மாணவர்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டுள்ளனர்

Published On 2023-10-28 09:27 GMT   |   Update On 2023-10-28 09:27 GMT
  • வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வட முகம் வெள்ளோடு கிராம த்தில் 77.85 ஹெக்டேரில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

சரணாலயத்தில் தற்போது பெரிய நீர் காகம், சிறிய நீர் காகம், பாம்பு தாரா, ஆமைக்கோழி, வண்ணநாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நாரை, ஆள்காட்டி பறவை, அலகு புள்ளி மூக்கு வாத்து, காட நாரை, கரண்டி வாயன், அகிலான், மூக்கன், கருங்கை, வாயன் உட்பட 100-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

இது மட்டுமின்றி வெளிநாடு களில் இருந்து 109 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவை கள் அதிகம் வருகின்றன.

இவை 4 மாதங்கள் தங்கி முட்டை யிட்டு குஞ்சு பொரித்து இன ப்பெரு க்கம் செய்து திரும்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இயற்கை எழிலுடன் அமை ந்த பற வைகள் சர ணால யத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணி கள் பார்வையிட அனுமதி அளி க்கப்பட்டுள்ளது.

ஈரோடு மட்டும் இல்லா மல் அருகே உள்ள மாவட்ட ங்களை சேர்ந்த சுற்றுலா பயணி கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வாடிக்கை. சரணாலயத்துக்குள் சென்று ரசிக்க பெரியோர்களு க்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணம் வசூலி க்கப்படுகிறது.

இந்த சரணாலயத்துக்கு மாணவர்களை அழை த்து வரும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு வன கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு , பறவைகள் விலங்குகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் முயற்சி யாக மாணவர்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு 5 ரூபாய் கட்டணமும், அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த கட்டணம் இன்றி அனுமதிக்கிறோம்.

இது தவிர வனத்துறை அலுவலர்கள் நேரடியாக அரசு பள்ளிகளுக்கு சென்று எங்களுடைய வாகனத்தில் குழந்தைகளை அழைத்து வந்து சரணாலயத்தை சுற்றிக் காட்டுவதுடன் பறவைகள் வில ங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

வனம், விலங்குகள் பறவைகளின் அவசியத்தை எடுத்துரைக்கிறோம். ஈரோடு மாவட்டம் மாணவர்கள் மட்டுமின்றி கரூர், திருச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பறவை சரணாலயத்துக்கு வந்து சரணாலயத்தை பார்வையிட்டு சென்று உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News