உள்ளூர் செய்திகள் (District)

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்த பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-07-05 10:06 GMT   |   Update On 2023-07-05 10:06 GMT
  • வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • 2 அழகிகளை மீட்டனர்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் திரு.வி.க. நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விபசார புரோக்கர்கள் மகாலட்சுமி (51), பிரகாஷ் (47), சங்கர் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 அழகிகளை மீட்டனர். தலைமறைவான கவிதா என்கிற மல்லிகா என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் வீடு வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் விபசாரம் செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாத காலத்தில் விபசாரம் தொடர்பாக போலீசார் 16 பேரை கைது செய்து உள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீடு வாடகைக்கு யாராவது கேட்டால் முழுமையாக விசாரணை நடத்தி வீடுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News