உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

Published On 2022-07-13 09:33 GMT   |   Update On 2022-07-13 09:33 GMT
  • வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்.
  • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலி வரும் போது வலி தெரி யாமல் இருப்பதற்காக மது குடித்து உள்ளார்

இந்த நிலையில் ராமசாமி மது குடித்து விட்டு களை கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி ஜெகதீஸ்வரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இற ந்தார். இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News