உள்ளூர் செய்திகள் (District)
- வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த முனியப்பன் மது குடித்து விட்டு வந்துள்ளார்.
- இதனால் ருக்மணி அவரது மகன்களுடன் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அங்கன்னகவுண்டன் புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முனியப்பன்(34). கூலி தொழிலாளி. இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
முனியப்பனுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த முனியப்பன் மது குடித்து விட்டு வந்துள்ளார்.
இதனால் ருக்மணி அவரது மகன்களுடன் கோபித்துக்கொண்டு அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதில் மனவேதனை அடைந்த முனியப்பன் மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.