ஓடும் பஸ்ஸில் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த பேஸ்புக் காதலன்
- பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது.
- அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் 17வது சிறுமி, பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவருக்கு பேஸ்புக் மூலம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற வாலிபருடன் வழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் மாணவியை, தினேஷ்குமார் நேரில் சந்தித்து அடிக்கடி பேசி வந்தார். அப்போது சிறுமியிடம் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.அவரது பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி தினேஷ்குமார் என்பவர் கடத்தி சென்று விட்டார் என கூறியிருந்தனர்.
இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரணை நடத்தி கடத்தல் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியையும், தினேஷ் குமாரையும் போலீசார் தேடி வந்தனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சிறுமியை போலீசார் மீட்டு விசாரித்தனர். விசா ரணையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக காதலன் தினேஷ்குமார் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
வண்டலூரில் உள்ள நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்த போது சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை அறிந்து அவர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்து மீண்டும் ஆத்தூருக்கு சென்னை, சேலம் தனியார் சொகுசு பஸ் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ஸ்லீப்பர் கோச் பஸ்சில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர். ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் அவர்கள் படுத்திருந்தனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்படவே நீண்ட நேரம் பஸ் அங்கே நின்றது. அப்போது சிறுமியை பஸ்சில் வைத்து தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்தார்.பிறகு வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு தப்பிச் சென்றார் என்பது தெரியவந்தது.
இதை அடுத்து தினேஷ்கு மார் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். நேற்று வளையமாதேவி பஸ் ஸ்டாப் பகுதியில் தினேஷ்குமார் நிற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையான போலீசார் குறைந்து சென்று தினேஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்த னர்.இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.