உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

சின்னமனூர் அருகே மருமகனை கத்தியால் குத்திய மாமனார் கைது

Published On 2023-10-28 06:03 GMT   |   Update On 2023-10-28 06:03 GMT
  • மாமனார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மருமகனை மிரட்டி வந்துள்ளார்.
  • சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து மருமகனை குத்தி காயப்படுத்தினார்.

சின்னமனூர்:

சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது மாமனார் மாரியப்பன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு சதீஷ்குமாரை மிரட்டி வந்துள்ளார்.

சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தி காயப்படுத்தினார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

Tags:    

Similar News