உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விபத்தில் தனியார் பள்ளி பெண் ஊழியர் பலி

Published On 2023-04-29 09:16 GMT   |   Update On 2023-04-29 09:16 GMT
  • சகாயமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்.

கோவை துடியலூர் முத்துநகர் 5-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. பெயின்டர்.

இவரது மனைவி சகாயமேரி (52). தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் அைனவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

சம்பவத்தன்று அந்தோணிசாமி தனது மனைவி சகாயமேரியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலை விசுவநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த சகாயமேரி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சகாயமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News