மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
- முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
- கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகர்மனற் தலைவர் பரிதா நவாப் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தார்.
பின்னர் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தினை சுத்தம் செய்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இது குறித்து தலைமையாசிரியர் கூறுகையில், வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம், சுய முன்னேற்ற விழிப்புணர்வு முகாம், முதலுதவி முகாம், கண்சிகிச்சை முகாம் மற்றும் கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்வேதா ராணி, பள்ளி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, செல்வி, சண்முகப்பிரியா, புவனேஸ்வரி, கவிதா, வெண்ணிலா, மற்றும் முரளி, நயாஸ், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.