உள்ளூர் செய்திகள்
- கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்தது.
- கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ணநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. சமவெளிப் பகுதிகளில் இருந்து கோத்தகிரிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் இந்த சீதோஷ்ண நிலையை அனுபவித்து மகிழ்ந்தனர். கோத்தகிரியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கோடநாடு பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.