உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வீட்டில் தீ விபத்து-உடல் கருகி ெபண் வக்கீல் பலி

Published On 2023-04-30 09:31 GMT   |   Update On 2023-04-30 09:31 GMT
  • இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
  • உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை,

கோவை நியூ சித்தாபுதுர் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (வயது70).

இவர் முன்னாள் அரசு வக்கீல் ஆவார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்ற அவர் நேற்று கோவைக்கு வந்தார்.

வழக்கம் போல நேற்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இன்று அதிகாலை அவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

சிறிது நேரத்தில் அவரது படுக்கை அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அத்துடன் அவர் மீது தீ பரவியது.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது அவரது உடல் முழுவதும் தீ வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் உடல் கருகிய ரேனுகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News