உள்ளூர் செய்திகள் (District)
விளாங்குடியில், நாளை மக்கள் நேர்காணல் முகாம்- கலெக்டர் தகவல்
- நாளை திருவையாறு தாலுகா, விளாங்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
- தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வுபெற்றுக்கொள்ளுலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் "மக்கள் நேர்காணல் முகாம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்ததை தொடர்ந்து நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம், விளாங்குடி கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெறுகிறது .
மேற்படி முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வுபெற்றுக்கொள்ளுலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.