குந்தா பகுதி நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் ஆய்வு
- மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
- மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் வட்ட செயல்முறை கிடங்கினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவற்றினை கேட்டறிந்து மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பினை அதிகப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் முருகானந்தம், துணைப்பதிவாளர் அமீர் அஹசன் முசபர் இம்தியாஸ், உதவி மேலாளர் சுந்தரராமன், கண்காணிப்பாளர் விஸ்வநாதன், குந்தா தாசில்தார் இந்திரா, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் வேடியப்பன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.