உள்ளூர் செய்திகள் (District)

ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை ஆய்வு செய்த நிர்வாகிகள்.

தாரமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தில் ஆய்வு

Published On 2023-01-13 07:28 GMT   |   Update On 2023-01-13 07:28 GMT
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
  • அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

தாரமங்கலம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழநாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கூலமேடு, தம்மம்பட்டி, நிலவாரபட்டி ஆகிய ஊர்களை தொடர்ந்து தற்போது தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குபட்டி ஊராட்சி பவளத்தானுர் பகுதியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தாரமங்கலம் பி ஆர் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் போட்டியை நடத்து

வதற்கான முதற்கட்ட பணியை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி போட்டி நடத்துவதற்கான இடத்தை பவளத்தானுரில் 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடத்தை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மாநில பேரவை தலைவர் ராஜசேகரன், செயலாளர் நாராயணன் ஆகியோர் வந்து இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் மாநில தலைவர் ராஜசேகரன் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டை அழியாமல் பார்த்துக்கொள்ளவும், நாட்டு இன காளைகளை வளர்க்கவும் நாங்கள் இந்த வீர விளையாட்டை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறோம் அதன்படி தமிழக அரசின் அனுமதியோடு அரசின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெற்று விழா நடத்தி வருகிறோம்,

அதன்படி இந்த ஆண்டு தாரமங்கலம் அருகில் பவளத்தானுர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த இடம் ஜல்லிக்கட்டு நடத்த தகுந்த இடமாக அமைந்துள்ளது, எனவே இந்த இடத்தில் விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்,

அப்போது விழா ஏற்பாட்டாளர்கள் தாரமங்கலம் நகராட்சி மன்ற தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் தனம்,குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாச்சலம்,ரகுபதி, ராஜேந்திரன்,தங்கராஜ், தாரமங்கலம் பிஆர் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News