உள்ளூர் செய்திகள்

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா

Published On 2023-03-08 12:08 GMT   |   Update On 2023-03-08 12:08 GMT
  • லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.
  • தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

திருவொற்றியூர்:

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கல்பனா தலைமையில் நடக்கிறது.

லதா நாராயணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பேராசிரியர் ஜெயஸ்ரீ, எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்குகிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை வட சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளர் குணசுந்தரி, மாநில நிர்வாகிகள் மீனா, ஆனந்தி, விஜயலட்சுமி, கல்யாணி, வர்ஷா, லெசி, அனிதா, ராஜ புஷ்பம், இளங்காவதி ஆகியோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News